தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு- காஷ்மீரில் கடும் குளிர் பள்ளிகளுக்கு பிப். வரை விடுமுறை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகரில் கடந்த நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியசாக பதிவானது. இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி நர்சரி மற்றும் கேஜி வகுப்புகளுக்கு நேற்று முதல் வரும் பிப்ரவரி 28 வரையிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28ம் தேதி வரையிலும் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 22ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் எந்தவொரு கல்வி பணிக்கும் தயாராக இருக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வரும் பிப்ரவரி 20ம் தேதி முதல் வர வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement