தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

*வண்ண பொடிகளை தூவி பெண்கள் உற்சாகம்
Advertisement

சேலம் : சேலம் நாராயண நகரில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள், நேற்று உற்சாகமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையாக ஹோலி கொண்டாட்டம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள், ஹோலியை குடும்பத்துடன் கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

அதேசமயம், தமிழகத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள், இங்கேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று சேலத்தில் ஹோலி கொண்டாட்டம் நடந்தது. வடமாநிலத்தவர் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஒன்றான நாராயண நகர் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

ஹோலி பண்டிகையின் அடையாளமான, வண்ண, வண்ண கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், முகத்தில் பூசிக்கொண்டும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கலர்பொடி கலந்த நீரை, தெளித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் ஊர்வலமாக வந்த வட மாநிலத்தவர்கள், தங்களது பாரம்பரிய நடனங்களை ஆடினர். மேலும், இனிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Related News