தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

509 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் கொடியேற்றம்

பொன்னேரி: பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரம் சனிக்கிழமை தேர்பவனியும் அதனை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுகிழமை சிறப்பு திருப்பலியோடு திருவிழா முடிவது வழக்கம்.
Advertisement

இந்நிலையில், ஈஸ்டர் பெருவிழா முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் 509 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் திருவிழாவையொட்டி அன்னையின் கொடியானது மேள தாளத்துடன் பக்தர்கள் திரளாக கொடியினை சுமந்து திருவீதி உலா வந்தனர். பின்னர் ஆலய கொடிமரத்தில், சென்னை மயிலை மறைமாவட்ட அருட்தந்தைகள் மார்டின் சார்லஸ், ஜோசப் ஜெயக்குமார் மற்றும் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் கபிரியேல் ஆகியோர் கொடியினை மந்திரித்து கொடியேற்றி இந்த விழாவை துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்னதாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அன்னையின் கொடி பக்தர்களின் முன்னிலையில் மந்திரிக்கப்பட்டு கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. அதன்பின் நற்கருணை ஆசிவாதமும், சிறப்பு மறையுரையும் நடைப்பெற்றது. நடுவூர்மாதா குப்பம் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர். மேலும், ஞாயிறன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி, மத, இன வேறுபாடின்றி திருத்தலத்தை அலையென நாடிவந்து காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர்.

Advertisement

Related News