தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளாக கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின.

Advertisement

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவோ, பரிசல் சவாரி செய்யவோ தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 13,249 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு நேற்று 18 ஆயிரம் கன அடிக்கும் கீழ் குறைந்தது.

ஒகேனக்கல் நீர் வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்ததால் 10 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement