ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி
மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 32,000 கனஅடியாக இருந்து நீர்வரத்து நேற்று மாலை 20,000 கனஅடியாக குறைந்தது.
Advertisement
நீர்வரத்து குறைந்துள்ளதால், 4 நாட்களுக்கு பின்னர், நேற்று பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, 56,996 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 19,850 கனஅடியாகவும் குறைந்தது. எனினும் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
Advertisement