தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 98,000 கன அடி நீர்வரத்து: 5-வது முறையாக அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 98,000 கன அடியாக நிலவுகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது. இதனிடையே நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை ஏத்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

கடந்த ஆண்டு ஜூன் 29 தேதி நடப்பாண்டில் முதன் முறையாகவும், அணையின் வரலாற்றில் 44வது முறையாகவும் முழுவதுமாக நிரம்பியது. நடப்பாண்டில் ஜூலை 5ஆம் தேதி இரண்டாவது முறையும், ஜூலை 20ல் மூன்றாவது முறையாகவும், அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை 25ஆம் தேதி தொடர்ந்து இன்று அதிகாலை அணை முழு கொள்ளளவை எட்டியது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,14,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 90,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்படுவதால் நிர்வரது படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News