தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்து வந்தது எஸ்ஐடி நடத்திய விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement

மாநிலத்தின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் வெளியாகியது. நூற்றுக்கணக்கான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பென்டிரைவ் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சிஐடி போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை படையினர் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை படை அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவின் கடந்த கால வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தி வரும் விசாரணையில், பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐபி பரிசோதனை செய்து கொண்டது தெரியவந்துள்ளதுடன், எந்தெந்த மையங்களில் பரிசோதனை நடத்தினார் என்ற விவரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே சிறையில் சகோதரர்கள்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் ஓரின சேர்க்கை புகாரில் கைதான அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News