தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு, மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தரம்பூர் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. டேராடூனில் சகஸ்தரதாராவில் உள்ள தப்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலின் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மண்டி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தரம்பூர் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. நேற்று இரவு முதல் மண்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தரம்பூர் பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பலத்த நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

சோன் காட் நதி திடீரெனப் பெருக்கெடுத்து சீற்றம் கொண்டதால் தர்மபூர் நகரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நள்ளிரவில், பேருந்து நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது, பல அரசு பேருந்துகள் மூழ்கடிக்கப்பட்டு, கார்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News