தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமாச்சல பிரதேசத்தின் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் பயணித்த நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துடா பகுதியில் நேற்று (அக்டோபர் 7) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பயணிகள் தனியார் பேருந்து சிக்கியது. நிலச்சரிவின் இடிபாடுகள் மற்றும் பாறைகள் நேரடியாக வாகனத்தின் மீது விழுந்ததால், பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதன் விளைவாக, 18 பேர் உயிரிழந்தனர்.

18 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததால் இறப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய பயணிகளை மீட்கும் பனி நடைபெற்று வருகிறது.

பேருந்து கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Advertisement