தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளிக்குடி அருகே நெடுஞ்சாலையில் மேம்பால பணிகளுக்காக மின்கம்பங்கள் இடமாற்றம்

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டையில் புதியதாக அமைய உள்ள நான்குவழிச்சாலை மேம்பால பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றும் பணிகள் துவங்கியுள்ளன. பெங்களூர் - கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம், கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டை மற்றும் கள்ளிக்குடி ஆகிய 3 இடங்களில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதற்கான பூமிபூஜை விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்து நிலையில், தற்போது சிவரக்கோட்டை மற்றும் கள்ளிக்குடியில் 4 வழிச்சாலையில் புதிய மேம்பாலபணிகள் துவங்கியுள்ளன. இதில் சிவரக்கோட்டையில் ரூ.27 கோடியில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாலம் செங்கபடை பிரிவு பகுதியில் துவங்கி மருதுபாண்டியர் சிலை வரையில் அமைகிறது. இதில் இருபுறமும் பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இந்தநிலையில் சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் மின்கம்பிகள் செல்கின்றன. இங்கு புதியதாக மேம்பாலம் வரும் போது மின்கம்பிகள் இடையூறாக இருக்கும் என்பதால் நேற்று அந்த பகுதியில் உள்ள குறைந்த உயரம் கொண்ட மின்கம்பங்களை அகற்றி விட்டு செங்கபடை பிரிவு பகுதியில் புதியதாக மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement