தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிக மதிப்பெண் பெற செய்வதாக கூறி பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி: போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

Advertisement

மதுரை: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற செய்வதாக கூறி, மாணவியை கர்ப்பமாக்கியது தொடர்பாக கைதான பூசாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தோஷம் கழிப்பதாக கூறி பூசாரி பல இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடியது தெரிய வந்துள்ளது. மதுரையை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றபோது 8 மாதம் கர்ப்பம் என தெரிய வந்தது.

இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மாணவியிடம் விசாரித்ததில், மதுரை கண்ணனேந்தல் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான சசிக்குமார் (45) என்பவர், மாணவியிடம் பழகி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பூஜை செய்வதாக கூறி, அவரை வரவழைத்து பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிக்குமாரை கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``பூசாரி சசிக்குமார் கண்ணனேந்தல் பகுதியில் உள்ள சிறிய கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்வது வழக்கம். அப்போது, தோஷம் கழிப்பதற்காக பெற்றோர்களுடன் வரும் இளம்பெண்களிடம் வசீகரமாக பேசி, சிறப்பு பூஜை செய்தால் தோஷம் கழிந்துவிடும் என கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார். பூஜைகளில் பெண்களை தவிர யாரும் இருக்கக்கூடாது என்று கூறி பெற்றோர்களை வெளியே அனுப்பி விடுவாராம். பின்னர் சிறப்பு பூஜையில் தனியாக இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வாராம். இந்த விவகாரத்தில் இளம்பெண்கள் அவமானம் கருதியும், அச்சத்தாலும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவி கர்ப்பம் ஆனதால் பூசாரியின் லீலைகள் அம்பலமாகிவிட்டது’’ என்றனர்.

Advertisement

Related News