தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலங்காடு அருகே இருளில் மூழ்கிய உயர்மட்ட பாலம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

Advertisement

திருத்தணி: திருவாலங்காடு அருகே உயர்மட்ட பாலம் மின் விளக்குகள் இன்றி இருளி மூழ்கி காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருவாலங்காடு அருகே, என்.என்.கண்டிகை நெமிலி பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதனால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதனால், திருத்தணியில் இருந்து என்.என்.கண்டிகை வழியாக ஆந்திராவில் சத்தியவேடு, நாகலாபுரம் பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டது.

இதனால், சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அச்சமின்றி பயணம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் இவ்வழியாக சென்று வர அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News