தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பெருமிதம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சர் புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகக் கலைஞர் எப்போதும் திகழ்ந்தார். கலைஞர் வழித்தடத்தில் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டு முதல்வர் மதச் சிறுபான்மையினரையும் மொழிச் சிறுபான்மையினரையும் தம்மிரு கண்கள்போல் பாவித்து மிகச்சிறந்ததோர் ஆட்சியை நடத்தி வருகிறார். நமது முதலமைச்சரின் ஆட்சிக்காலம் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியாக இருந்து வருகிறது. ஒரு சாரார்களுக்கு மட்டுமே உைடமையாக இருந்த கல்வியை நீதிக் கட்சியும், திக, திமுக கடுமையாகப் போராடிப் பெற்ற சமூகநீதி சார்ந்த ‘இட ஒதுக்கீடு‘ கோட்பாட்டின் வெற்றிதான் இது. இன்றைய தலைமுறையினர் இவற்றை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
Advertisement

Advertisement

Related News