தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு நிர்வாகப் பயிற்சி: அமைச்சர் கோவி. செழியன் துவங்கி வைத்தார்

சென்னை: அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கான நிர்வாகப் பயிற்சியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் துவங்கி வைத்தார். அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் முதல்வர்கள், பொறுப்பு முதல்வர்கள், இணை இயக்குநர்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட நிர்வாகப் பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நிர்வாகப் பயிற்சி, அணிக்கு 40 நபர்கள் வீதம் 6 அணிகளுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் வாயிலாக 4 நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்தார்.

Advertisement

இதனை செயல்படுத்திடும் வகையில், நிர்வாகப் பயிற்சி அளிப்பதற்கென ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக கல்லூரிக் கல்வித் துறையைச் சார்ந்த 175 முதல்வர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 65 முதல்வர்கள் என மொத்தம் 240 நபர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கான நிர்வாகப் பயிற்சியினை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News