தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எனக்கு ஐகோர்ட் நீதிபதி பதவி தாங்க... உச்ச நீதிமன்றத்தில் விநோத மனு: தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: தெலங்கானாவை சேர்ந்த ஒருவர் தன்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இது நீதிமன்றத்தை கேலி செய்வதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்தார். ஜி.வி.சர்வண் குமார் என்பவர் தன்னை தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

இந்த மனுவை பார்த்து எரிச்சலடைந்த தலைமை நீதிபதி கவாய், உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் தொடர்பான மனுக்களை நாங்கள் எப்போது விவாதித்தோம். இந்த விவகாரம் நீதித்துறை செயல்முறையை கேலி செய்வது ஆகும். இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட கொலீஜியத்தை கூட்ட உத்தரவிடட்டுமா? உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய விண்ணப்பம் செய்வதை எங்கே கேள்விப்பட்டீர்கள்? இது போன்ற ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தின் முன் கொண்டு வந்திருக்கக்கவே கூடாது என்று மனுதாரரின் வழக்கறிஞரை தலைமை நீதிபதி எச்சரித்தார். பின்னர் வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்து மனுவை வாபஸ் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

Related News