தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது எப்போது? அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது எப்போது என்பது குறித்த அளிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்கள், இறுதி வாதங்களைக் கேட்டு, தங்கள் முடிவுகளை முன்பதிவு செய்த பிறகு, பல ஆண்டுகளாக குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்காதது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில்,’ உயர் நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் வந்துள்ளன, அதில் எத்தனை தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எத்தனை வழக்குகளில் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன. எந்த தேதியில் தீர்ப்பு உயர் நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதற்காக உயர் நீதிமன்ற வலைத்தளத்தில் ஒரு டேஷ்போர்டை அல்லது தனி சாளரத்தை உருவாக்குவது, நீதித்துறையின் மக்கள் மீதான பொறுப்புணர்வுகளைக் காண்பிக்கும். இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அலகாபாத், பஞ்சாப் மற்றும் அரியானா, பாட்னா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், கேரளா, தெலங்கானா மற்றும் கவுகாத்தி ஆகிய உயர் நீதிமன்றங்கள் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தயார் செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அல்லது அடுத்த விசாரணைத் தேதியில் உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டும். இந்திய அளவிலான வழிகாட்டுதல்களை வகுக்க, பொதுமக்களுக்குத் தகவல்களைப் பரப்புவதை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை உயர் நீதிமன்றங்கள் வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 31 முதல் அக்டோபர் 31 வரை வந்த வழக்குகளின் எண்ணிக்கை, அந்தக் காலகட்டத்தில் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, எந்த தேதியில் தீர்ப்புகள் உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Advertisement