அதிக லாபம் தருவதாக 86 பேரிடம் 4 கோடி ரூபாய் மோசடி: ஸ்வர்ணதாரா குழுமத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது
Advertisement
இதனை நம்பி அந்நிறுவனத்தில் 86 பேர் பலலட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் கூறியவாறு முதலீட்டு பணத்தையும் தராமல் அவர்கள் ஏமாற்றுவது தெரியவந்தது. இதை அடுத்து புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி நொளம்பூர் பகுதியை சேர்ந்த ஸ்வர்ணதாரா நிறுவனத்தின் சேர்மன் வெங்கட ரங்க குப்தா மற்றும் நிர்வாக இயக்குனர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 44 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement