தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நட்பு என்ற உறவு, உணர்வு அடிப்படையிலானது; அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது: கிட்னி தானம் பெறும் வழக்கில் ஐகோர்ட் கருத்து!!

சென்னை: கிட்னி தானம் பெறும் பெரியசாமியும், வழங்கும் கணேசனும் அங்கீகார குழு முன் குடும்பத்தினருடன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பெரியசாமிக்கு, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கிட்னியை தானமாக தர முன்வந்தார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி, அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதையடுத்து

Advertisement

அறிக்கை அடிப்படையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அங்கீகார குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, கிட்னியை தானமாக பெற உள்ள பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என ஈரோடு ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, குடும்ப நட்பை எப்படி ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நட்பு என்ற உறவு, உணர்வு அடிப்படையிலானது; அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது என கூறினார். மேலும், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவு எடுக்க குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News