தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

ராஞ்சி: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நிலமோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், கடந்த ஜூன் 28ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராகப் பதவி வகித்து வந்த சம்பாய் சோரன், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.
Advertisement

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் மூன்றாவது முறையாக ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். தொடர்ந்து, ஜார்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஜேஎம்எம் உள்பட கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 இடங்களில் ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1, பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பெரும்பான்மை பலத்திற்கான 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஜேஎம்எம் கூட்டணிக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றிப் பெற்றது. தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்றது. இன்று மாலை அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்றும், அவர்களின் பதவியேற்பு நிகழ்வும் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement

Related News