வால்பாறையில் சாரல் மழையால் மூடு பனி; குவியும் சுற்றுலா பயணிகள்
ஆங்காங்கே வறண்டு போன அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. அவ்வப்போது லேசான சாரல், சில இடங்களில் மிதமான மூடுபனி, சில இடங்களில் எதிரே வருபவர் தெரியாத அளவுக்கு மூடு பனி என அசத்தலான கால நிலை நீடிப்பதால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.