தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விடியவிடிய பலத்த மழை; பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

 

பொன்னை: வேலூர் மற்றும் ஆந்திராவில் விடியவிடிய பெய்த பலத்த மழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்றும் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் காட்பாடி அடுத்த பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.

அதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு 8 மணி முதல் இன்று காலை வரை வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடியுடன் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொன்னை ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கிணறுகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. மேலும் விடியவிடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பொன்னையில் 49.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.