தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனமழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு: தீபாவளி தினத்தில் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை மற்றும் கடம்பூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், தீபாவளி தினத்தன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Advertisement

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கனமழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் 7, 8, 20 மற்றும் 27வது கொண்டை ஊசி வளைவுகளில் மொத்தம் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை துறையினர், ஆசனூர் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கொட்டி கிடந்த மண் மற்றும் கற்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலை பாதையிலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டதால், கடம்பூர் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சீரானது. தீபாவளி தினத்தன்று மலைப்பாதைகளில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Advertisement

Related News