தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியட்நாம், தாய்லாந்தில் கனமழை, வௌ்ளம்: 8 பேர் பலி; 35 பேர் மாயம்

ஹனோய்: சீனாவின் தெற்கில் உள்ள சான்யா நகரை கடந்த வாரம் தாக்கிய கஜிகி என்ற சக்தி வாய்ந்த வெப்ப மண்டல சூறாவளி தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி நகர்ந்தது. இதனால் வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 117கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. தலைநகர் ஹனோய் உள்பட பல முக்கிய நகரங்கள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. வடகிழக்கு வியட்நாமில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் 20செமீ மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகி உள்ளார். 34 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் தாய்லாந்திலும் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் மாயின் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். ஒருவர் மாயமாகி உள்ளார். தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் திடீர் வௌ்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertisement

Related News