தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் கனமழை, ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மண்டபம்: தொடர் கனமழை, ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று ஆகிய காரணங்களால் மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றும், கனமழையும் பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மண்டபம் கடலோர பகுதியில் கனமழை மற்றும் கடல் அலை ஆக்ரோஷமாக வீசி வருகிறது.

Advertisement

இதையடுத்து மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் இன்று காலை மீன்பிடிக்க செல்லவிருந்த மீனவர்களுக்கு, மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்த அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மீன்பிடி தூண்டில் வளைவு பாலம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீனவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல, மண்டபம், வேதாளை உள்பட மண்டபத்தை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை கரை நிறுத்தியுள்ளனர். சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு போகாமல் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நேற்று அதிகாலை தொடங்கிய மழை இரவில் கனமழையாக மாறி இன்று காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News