தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்திரமேரூர் அருகே புழுதியை கிளப்பும் கனரக வாகனங்கள்: கிராம மக்கள் பாதிப்பு

 

Advertisement

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேறி, பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரி மற்றும் கிரஷர்களிலிருந்து எம் சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அருங்குன்றம், பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இவ்வாறு செயல்படும் லாரிகளிலிருந்தும், வெளியேறும் புழுதியாலும் மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிப்புள்ளாகிறது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த கல்குவாரி கிரஷரிலிருந்து வரும் புழுதி, கிராமப் புறங்களில் சூழ்வதால் கிராம மக்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர். மேலும் கிராமப்புற சாலைகள் பெருமளவு பழுதாகி வருகிறது. இந்த கனரக லாரிகள் காலை மாலையில் செல்லும்போது பள்ளி மாணவ - மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News