தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால் ராமேஸ்வரத்தில் கொட்டி தீர்த்த கனமழை

Advertisement

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி ராமேஸ்வரத்தில் நேற்று பகலில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இன்று காலையிலும் கனமழை நீடித்ததால் பொதுமக்கள், மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ராமேஸ்வரத்தில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பனில் 62 மி.மீ, தங்கச்சிமடத்தில் 40.60 மி.மீ. மழை பாதிவானது. தீவு முழுவதும் கடந்த 12 மணி நேரத்தில் மொத்தம் 15.96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடலுக்கு செல்ல தடை உத்தரவு தொடர்வதால் மீனவர்கள் இன்று 3வது நாளாக வீடுகளில் முடங்கினர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

Advertisement

Related News