தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

அண்ணா நகர்: சென்னையில் பெஞ்சல் புயல் காரணமாக, விடிய விடிய தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் காய்கறி, பூ, பழம் ஆகிய பொருட்களை வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே வராமல் திரும்பி சென்றனர்.
Advertisement

அங்காடி நிர்வாகம் சார்பில் ராட்சத மோட்டார் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று காலை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அதேபோல மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியையும் பார்வையிட்டு அந்த பகுதியில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளையும் பார்வைட்டார். மழைநீர் தேங்காதவாறு சுழற்சி முறையில் ஊழியர்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்காடி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை என்று கூட பார்க்காமல் அங்காடி நிர்வாக அதிகாரிகள் மழை நரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement