தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை சாலைகள் மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்த மழைநீர்

 

Advertisement

திண்டுக்கல்: அகினிநட்சத்திரம் முடிந்து பலமாதங்கள் ஆகியும் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக பல இன்னலுக்கு ஆளாக்கக்கூடிய சூழ்நிலை வந்ததுள்ளது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்திருந்த நிலையில் வழக்கம் போல் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் திடீர் என்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலையில் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக தற்போது குளிர்ச்சியான சுழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பேகம்பூர், பூச்சிநாயகப்பெட்டி, தோமையபுரம், நாகல்நகர், சிலம்படி, சிற்றிநாயகப்பெட்டி, உட்பட்ட பல பகுதிகளிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement