தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டியது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் லேசாக சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த மழை பொதுமக்களுக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது.