தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் மேக வெடிப்பால் கனமழை வாலிபர் பலி; 3 பேர் மாயம்: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருமலை: தெலங்கானாவில் நேற்றிரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலியானார். 3 பேர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், செகந்திராபாத், முஷீராபாத் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

Advertisement

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆசிப் நகரில் உள்ள அப்சல்சாகரில் மங்காருபஸ்தி ராமு, அர்ஜூன் ஆகியோரும், செகந்திராபாத்தில் உள்ள பார்சிகுட்டா வினோபநகர் பகுதியில் தினேஷ் என்பவரும் வடிநீர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதேபோல் கச்சிபவுலியில் வட்டினகுலப்பள்ளியில் 10.5 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில் 24 வயது தொழிலாளி பலியானார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

கனமழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது, தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. போலீசார், தீயணைப்புபடை வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்து வந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். ஐதராபாத்தில் 33.9மி.மீ, முஷீராபாத் மற்றும் பவுதாநகரில் 121 மி.மீ, ஜவஹர்நகரில் 112.8 மி.மீ, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 101.8 மி.மீ., ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர்மெட் மண்டலத்தில் 127.5 மி.மீ. மழையும் பதிவானது.

Advertisement

Related News