தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூறைக்காற்றுடன் பலத்த மழை 20 ஏக்கரில் பயிரிட்ட 20,000 வாழை நாசம்

*அருப்புக்கோட்டை விவசாயிகள் கவலை

Advertisement

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 20 ஏக்கரில் பயிரிட்ட 20 ஆயிரம் வாழைமரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பந்தல்குடி, வாழ்வாங்கி, செட்டிக்குறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். சிதம்பராபுரம், சின்ன செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கிணற்று பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சிதம்பராபுரம், சின்ன செட்டிக்குறிச்சி பகுதிகளில் சுமார் 20 ஏக்கரில் இருந்த 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீசிய சூறைக்காற்றுக்கு வாழைகள் முறிந்து சேதமடைந்தன. தற்போது வீசிய சூறைக்காற்றுக்கும் வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.

ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்த நிலையில், அறுவடை நேரத்தில் வாழைகள் முறிந்து சேதமடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Advertisement