தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் கனமழை: ஒரே மாதத்தில் 2-ஆவது முறையாக நிரம்பிய அடவி நயினார் அணை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அடவி நயினார் அணை இரண்டாவது முறையாக நிரம்பி வடிகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக மலை பகுதியையொட்டியுள்ள நீரோடைகள், ஆறுகள், அருவிகள் அணைக்கட்டுகள் அனைத்திலும் நீர்வரத்து பெரும் அளவு அதிகரித்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான மேக்கரையில் உள்ள அடவி நயினார் அணை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நிரம்பி வடிகிறது.

132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த மாதம் 27ஆம் தேதி நிரம்பி வடிந்தது. அதன் பிறகு விவசாயத்துக்காக தண்ணீர் விடப்பட்டதால் அணை நீர் வரத்து மெதுவாக குறைந்தது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக அணை மீண்டும் நிரம்பி வடிகிறது. தற்போது அணைக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், அணை நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது.

அதனால் நதியின் கரையோர பகுதி மக்கள் ஆற்றுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே குற்றால அருவிகள் அனைத்திலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியை பொறுத்தவரை இன்று வரை 5வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.

 

Related News