தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் கனமழை எதிரொலி; வானில் நீண்ட நேரமாக வட்டமிட்ட 4 விமானம் பெங்களூரு சென்றது: 15 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. குறிப்பாக, ஐதராபாத்தில் இருந்து 140 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பாட்டில் இருந்து 268 பயணிகளுடன் வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

Advertisement

இதேபோல் கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூர் மற்றும் டெல்லி உட்பட 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்து பறந்துவிட்டு தாமதமாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கோலாலம்பூர், பிராங்க்பாட், ஹாங்காங், இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், டெல்லி, புனே உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும் சென்னையில் மழை ஓய்ந்த பின்பு நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல், ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தன. விமான சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Advertisement

Related News