தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இதய ஈரிதழ் வால்வு மூலம் 58 வயது பெண்ணுக்கு சிகிச்சை: காவேரி மருத்துவமனை புதிய சாதனை

 

Advertisement

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக, 58 வயதான பெண் நோயாளி கடுமையான மூச்சுத் திணறல், பாதங்களில் வீக்கம் மற்றும் அதிக களைப்பு ஆகிய பிரச்னைகளால் கடும் சிரமத்தை அனுபவித்து வந்துள்ளார். பரிசோதனையில் இவருக்கு கடுமையான ‘மைட்ரல் ரெகுர்ஜிடேஷன்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது இதயத்தின் வால்வில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னையாகும். இதில் ரத்தம் இதயத்தில் பின்னோக்கிக் கசிந்து, பாதிப்பு அறிகுறிகளை மோசமாக்கி, இதய செயலிழப்புக்கான கடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான சிகிச்சை முறைகளை இந்த நோயாளிக்கு மேற்கொள்வது அதிக ஆபத்து நிறைந்தவையாக இருந்தன. மேலும், அவரது முதிர்ந்த வயது மற்றும் அவருக்கு இருந்த பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவை பரிசீலிக்கப்படவில்லை.

மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிப்பது மட்டும் அவரது பாதிப்பை குணப்படுத்த போதுமானதாக இல்லை. எனவே சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள்நாட்டுத் தயாரிப்பான மைட்ரல் கிளிப் சாதனத்தை பயன்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு காவேரி மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தலைமை இதயவியல் மருத்துவர் அஜித் பிள்ளை கூறியதாவது: கடுமையான மைட்ரல் ரெகுர்ஜிடேஷன் உள்ள நோயாளிகள், வயது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பலவீனம் அல்லது சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற இணை நோய் பிரச்னைகள் காரணமாக, திறந்தநிலை அறுவை சிகிச்சையை செய்துகொள்ள இயலாத சிரமத்துடன், அதிக ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மைட்ரல் ரெகுர்ஜிடேஷன் பாதிப்பு, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிர் பிழைக்காமல் போகலாம். மேலும் ஓர் ஆண்டுக்குள் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் 57 சதவீதம் வரை இருக்கலாம். அத்தகைய நோயாளிகளுக்கு, இந்த அறுவை சிகிச்சை அற்ற மைட்ரல் கிளிப் மருத்துவ செயல்முறை, உயிர் காக்கும் ஒரு சிறந்த மாற்று வழிமுறையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News