தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை அறிவுறுத்தல்

 

Advertisement

சென்னை: தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதற்​கான வழி​காட்​டு​தகவல்​களை மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: ரிக்​கட்​ஸியா எனப்​படும் பாக்​டீரியா பாதித்த ஒட்​டுண்​ணி​கள், பூச்​சிகள், உயி​ரினங்​கள் மனிதர்​களை கடிக்​கும்​போது, அவர்​களுக்கு ஸ்கரப் டைபஸ் காய்ச்​சல் ஏற்​படு​கிறது. காய்ச்​சல், தலை​வலி, உடல் சோர்வு மற்​றும் தடிப்​பு​கள் அதன் முக்​கிய அறிகுறிகளாக உள்​ளன. தமிழகத்​தில் சென்​னை, காஞ்​சிபுரம், திருப்​பத்​தூர், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, ராணிப்​பேட்​டை, வேலூர் ஆகிய பகு​தி​களில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பாதிப்பு இருந்து வரு​கிறது. இவைத​விர கிழக்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​கள், மேற்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​களி​லும்

ஸ்கரப் டைபஸ் தொற்று காணப்​படு​கிறது.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலத்​தில் அந்த பாதிப்பு அதி​கரித்து வரு​வ​தால் சென்னை மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் நோய் பரவல் ஏற்​படலாம் என அஞ்​சப்​படு​கிறது. இதையடுத்​து, அதற்​கான தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. விவ​சா​யிகள், புதர் மண்​டிய மற்​றும் வனப்​பகு​தி​களுக்கு அருகே வசிப்​பவர்​கள், மலை​யேற்​றத்​தில் ஈடு​படு​வோர், கர்ப்​பிணி​கள், பூச்​சிக் கடிக்​குள்​ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ளன.

எலிஸா ரத்த பரிசோதனை மற்​றும் மூலக்​கூறு பரிசோதனை​கள் மூல​மாக இந்த நோயை கண்​டறிய முடி​யும். ஸ்கரப் டைபஸ் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அசித்​ரோமைசின், டாக்​ஸிசைக்​ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்​துகளை அளித்து சிகிச்சை அளிக்க வேண்​டும். இந்த பாதிப்​புக்கு கடந்த ஆண்​டில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். நடப்​பாண்​டில் 4,000-க்​கும் அதி​க​மானோருக்கு பாதிப்பு கண்​டறியப்​பட்​டுள்​ளது. தற்​போது, 10 முதல் 20 பேர் வரை தின​மும் பாதிப்பு அறிகுறிகளு​டன் மருத்​து​வ​மனைக்கு வரு​கின்​றனர். மலைப்​பகு​தி​கள், புதர்ப்​பகு​தி​கள் மட்​டுமின்றி சமவெளி பகு​தி​களி​லும் அந்த பாதிப்பு கண்​டறியப்​படு​கிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அனைத்து மாவட்ட சுகா​தார அதி​காரி​களுக்​கும் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

 

 

Advertisement