தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய், பாம்பு கடிக்கு மருந்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க் கடிக்கு, பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சான்றிதழ் வழங்கி, அங்குள்ள முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Advertisement

நாய்க் கடிகளினால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. இதுதொடர்பாக தனி ஆய்வுக்கூட்டம் நடத்தி, முதல்வர், துணை முதல்வர் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அனைத்து அரசு செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசி நாய் இனப் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை உருவானதிலிருந்தே நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார அளவிலான மருத்துவமனைகளிலும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது.

தமிழ்நாட்டில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு ஏஆர்வி என்கின்ற மருந்தும், பாம்புக் கடிக்கு ஏஎஸ்வி என்கின்ற மருந்தும் இருப்பு வைக்கப்பட்டு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் நுழைவாயில்களிலும் பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துக்கான கையிருப்பு அளவு விளம்பரமும் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான சூழல் என்பது நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்குமான மருந்துகளில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை பலமுறை சொல்லி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement