வயலில் வேலை பார்த்த சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை: பீகாரை உலுக்கும் கொலைகள்
Advertisement
முன்னதாக நேற்று மாலை ஷேக்புரா கிராமத்தில் உள்ள தனது வயலில் சுரேந்திர குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது, குண்டுக்காயங்களுடன் சுரேந்திர குமார் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இந்த கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement