தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயலில் வேலை பார்த்த சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை: பீகாரை உலுக்கும் கொலைகள்

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஒரு வாரமாக சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 4ம் தேதி, பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ராணிதலாப் பகுதியில் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவர், கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், தற்போது கிராம சுகாதார அதிகாரியாகப் பணியாற்றி வந்த சுரேந்திர குமார் (50) என்பவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Advertisement

முன்னதாக நேற்று மாலை ஷேக்புரா கிராமத்தில் உள்ள தனது வயலில் சுரேந்திர குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது, குண்டுக்காயங்களுடன் சுரேந்திர குமார் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இந்த கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News