தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மண்டலத்தில் ரூ.12 கோடி விற்பனை இலக்கு

*கலெக்டர் சுகுமார் தகவல்

Advertisement

நெல்லை : நெல்லை மண்டலத்தில் கோ- ஆப்டெக்ஸ் மூலம் ரூ.12 கோடிக்கு தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கலெக்டர் சுகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நியூவின் கிரேஸ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் சுகுமார் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தீபாவளி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், திருப்புவனம் பட்டுபுடவைகள், சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கிகள், துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை பொருநை விற்பனை நிலையம், கீழ ரத வீதி டவுன் செந்தில் விற்பனை நிலையம், வடக்கு ரத வீதி டவுன் பட்டு மாளிகை விற்பனை நிலையம், பாளையங்கோட்டை விற்பனை நிலையம் ஆகிய 5 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், நெல்லை மண்டலத்தில் 13 விற்பனை நிலையங்களிலும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “ கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

விழாவில் கோ ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், துணை மண்டல மேலாளர் பாண்டியம்மாள், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News