தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒருங்கிணைப்பு முயற்சிக்கு முழு ஆதரவு ; செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்: ஓபிஎஸ் திட்டவட்டம்

தேனி: செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அடுத்தகட்ட நகர்வு குறித்து கேட்டபோது, ‘‘எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களாகிய உங்களை அழைத்து முடிவை தெரிவித்துவிட்டு தான் பணிகளை செய்வேன்.

Advertisement

அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவளிப்போம். இது தொடர்பாக செங்கோட்டையன் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். 10 நாட்கள் முடிந்த பின்னால், அனைவரையும் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அவகாசம் முடிந்த பிறகு, செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்’’ என்றார்.

நயினார் சமரசத்துக்கு தயாரா?

‘‘ஓபிஎஸ் - டிடிவி.தினகரனுடன் சமரசம் பேசத் தயார் என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘‘நயினார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துகள்’’ என்றார்.

Advertisement