தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ்சில் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: சென்னையை சேர்ந்தவர்களிடம் விசாரணை

Advertisement

ஒரத்தநாடு: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் ஒரத்தநாட்டுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணத்துடன் வந்த 2 பேர் பிடிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தாடு பகுதிக்கு, தனியார் ஆம்னி பஸ்சில், போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் பேரில், ஒரத்தநாடு போலீசார் வல்லம் சாலையில் நேற்று அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர். ஆனால் போதை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பஸ்சில் இருந்து சந்தேகப்படும்படி இறங்கிய 2 நபர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சையத் அலாவுதீன்(46), பாரிஸ் பகுதியை சேர்ந்த ஜாபர் அலி(51) என்பதும், சென்னை பாரிஸ் பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இருவரும், வெளிநாடுகளில் இருந்து ஹாவாலா பணத்தை விநியோகம் செய்வதை தொழிலாக செய்து வருவதும், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.33.04 லட்சம் ஒப்படைக்க எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வருமானவரிதுறை அதிகாரிகள் வந்து சையத் அலாவுதீன் மற்றும் ஜாபர் அலி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்து சென்றனர்.

Advertisement

Related News