தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானா ஏடிஜிபி தற்கொலை சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

 

Advertisement

சண்டிகர்: அரியானா போலீஸ் கூடுதல் டிஜிபியாக இருந்தவர் புரான்குமார். இவர் கடந்த 7ம் தேதி சண்டிகரில் உள்ள வீட்டில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரான்குமாரின் மனைவி அம்னீத் குமார் அரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியாவார். சம்பவம் நடந்த அன்று மாநில முதல்வர் நயாப் சிங் சைனியுடன் வெளிநாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் சென்றிருந்தார். இது பற்றி கேள்விப்பட்டதும் அவர் உடனே இந்தியா திரும்பினார். அவர் போலீசில் அளித்த புகாரில், அரியானா அரசு நிர்வாகத்தில் நிலவும் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் தான் புரான் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

தலித் என்பதால் எனது கணவருக்கு அதிக துன்புறுத்தல்கள் கொடுத்து வந்தனர். குறிப்பாக மாநில டிஜிபி ஷத்ருஜித் கபூர் தான் அதிக துன்புறுத்தல் கொடுத்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஏடிஜிபி புரான் குமார் தற்கொலை பற்றி விசாரிக்க ஐஜி தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் அமைத்துள்ளது. ஐஜி புஷ்பேந்திர குமார் தலைமையிலான குழுவில் சீனியர் எஸ்பி கன்வர்தீப் கவுர், எஸ்பி பிரியங்கா, டிஎஸ்பி சரண்ஜித்சிங் விர்க் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

Advertisement