தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு

 

Advertisement

சென்னை: சென்னை ஆவடி, பருத்திபட்டில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளிகளில் 142 மாணவர்களால் எழுதப்பட்ட கைப்புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. விழாவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், துணை தாளாளர் ஸ்ரீராம் வேல்மோகன் ஆகியோர் தலைமை தாங்கி, 142 மாணவர்களின் கைப்புத்தகங்களை வெளியிட்டனர். இதில், பள்ளி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பேசுகையில், 142 மாணவர்களின் கைப்புத்தகங்களில், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான சிந்தனைகளை பாராட்டினார். மேலும், அவர் கூறுகையில், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் ஊக்கம் மற்றும் ஆதரவு மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிகளவு நூல்களை படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு, உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும். இவர்களின் கைப்புத்தகங்கள் ஒரு நாள் சேத்தன் பகத் போன்ற பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை போல் தேசிய மற்றும் சர்வதேச அளவுக்கு உயரவேண்டும்’ என்றார். விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கைப்புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான படைப்பாற்றல் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் கனவு காணவும் எழுதவும் வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

Advertisement