தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

மெக்கா: ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கடந்த 14ம் தேதி புனித யாத்திரை தொடங்கியது. இதில், உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். சவுதியில் கடந்த 16ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் சில நாட்கள் வரை ஹஜ் பயணிகள் மெக்காவில் தங்கியிருந்து தங்களது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
Advertisement

இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு சென்றுள்ள யாத்ரீகர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மெக்கா அருகில் உள்ள அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் ஹஜ் பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். கடும் வெப்பம், கூட்ட நெரிசல், வயதான ஹஜ் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைபாடுகள் எதிரொலியாக ஏராளமான யாத்ரீகர்கள் சுருண்டு விழுந்து பலியாகினர்.

ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு காரணங்களால் 1,301 பேர் உயிரிழந்து இருப்பதாக சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் பஹத் அல் ஜலால் ஜல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனிகல், துனிசியா, மலேசியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான டான் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 90 ஹஜ் பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேரடி சூரியன் ஒளியின் கீழ், நீண்ட தூரம் ஓய்வின்றி நடந்ததால் இந்த முறை அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News