தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிப்பு
சென்னை : தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 மே 17 முதல் 20 வரை சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு ஜூன் 5 முதல் 8 வரை பயணம் மேற்கொள்ளலாம் .
ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாத்தில் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. பக்ரீத் பண்டிகையின் துல் ஹிஜ்ஜா மாதத்தின் போது மில்லியன் கணக்கிலான இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கு கொள்கிறார்கள். ஹஜ் யாத்திரையை எதற்காக இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாக சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சவூதி அரேபியாவின் மெக்கா நகரிற்கு இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் ஐந்து வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக குர்ஆன் வலியுறுத்துகிறது. இதனால் மெக்கா நகரிற்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஹஜ் யாத்திரையில் சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்க உள்ளனர். இந்த புனித பயணம் மன்னிப்பு தேடுவதற்கும், ஆன்மாவை சுத்தப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி கடமையாகும். நம்பிக்கை பிரகடனம், தினசரி பிரார்த்தனைகள், கட்டாய தர்மம் மற்றும் ரமலான் மாதத்தில் நோன்பு ஆகியவை மற்ற கடமைகளாகும். "'ஹஜ்' என்ற சொல் 'ஒரு பயணத்தை நோக்கமாகக் கொள்வது' என்ற அரபு மூலத்திலிருந்து பெறப்பட்டது. 2025 ஆம் ஆண்டில், இந்த யாத்திரை ஜூன் 4 முதல் ஜூன் 9 வரை நடைபெறும். இஸ்லாமிய நாட்காட்டி சந்திர சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், ஹஜ் தேதிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் முன்னதாக கிரிகோரியன் நாட்காட்டியில் நகர்கின்றன.
அந்த வகையில் 2026ம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவித்துள்ளனர். 2026 மே 17 முதல் 20 வரை சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு ஜூன் 5 முதல் 8 வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்