தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி: ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது

நொய்டா: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் உள்ளூர் மக்களை சந்தித்து விசாரணையை தொடங்கியுள்ளது. உபி மாநிலம் ஹத்ராசில் கடந்த 2ம் தேதி நடந்த போலே பாபா என்ற சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாயினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தேவ் பிரகாஷ் மதுக்கர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி விசாரணை குழுவை அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஹத்ராஸில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
Advertisement

பின்னர் நேற்று காலை ஹத்ராஸில் உள்ள பொதுமக்கள், அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். ஹத்ராஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் ஒரு அரசியல் கட்சியின் தொடர்பு குறித்தும் விசராணை நடந்து வருகிறது. 70க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement