தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போடுறா வெடிய... கொடுடா சுவீட்ட... பாஜ தோல்வியை கொண்டாடிய எச்.ராஜா

சென்னை: தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான எச்.ராஜா வீட்டில் பட்டாசு வெடித்து, சுவீட் கொடுத்து கொண்டாடினார். பாஜ முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா. இவர் கடந்த முறை (2019) சிவகங்கை எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை தனக்கு சீட் கிடைக்குமென ஆவலோடு எதிர்பார்த்தார்.
Advertisement

ஆனால், சாரணர் தேர்தல் உட்பட பல தேர்தல்களில் அவர் தொடர் தோல்வி அடைந்து வந்ததால், தலைமை இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பெயரளவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் அவர் எங்கும் போகாமல் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.

தமிழகத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வி அடைந்ததால், இங்குள்ள பாஜ தலைமை அலுவலகம் உட்பட கிளை அலுவலகங்களிலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. ஆனால், எச்.ராஜா மட்டும் சென்னையில் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு வெடி வைத்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியுள்ளார்.

இது பாஜ தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அண்ணாமலை மீதும், தனக்கு சீட் கொடுக்காத தலைமை மீதும் அதிருப்தியில் எச்.ராஜா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை காட்டவே எச்.ராஜா கொண்டாடியதாக கூறப்படுகிறது. ‘நம்ம தோத்ததுக்கு கொண்டாடுகிறாரா? இல்லை. இந்திய அளவில் பெற்ற இழுபறியான வெற்றிக்கு கொண்டாடுகிறாரா என தெரியவில்லையே...’ என அக்கட்சி தொண்டர்கள் முணுமுணுத்தனர்.

Advertisement