தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் மேலாளரின் பெயரில் ரூ.1.75 கோடி நூதன மோசடி: ஜிம் உரிமையாளர் கைது

 

Advertisement

சென்னை: திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தனது மனைவி அன்னபூரணியுடன் இணைந்து அண்ணாநகர் உள்பட சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்கள் நடத்தி வருகிறார். இதில், ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் மேலாளராக திருவல்லிக்கேணியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவரிடம், உரிமையாளர் சீனிவாசன் ஆசைவார்த்தை கூறி அவரது பெயரில் தனியாக உடற்பயிற்சி கூடம் அமைத்து தருவதாக, அவரது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பாரிமுனையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், பெண் மேலாளர் பெயரில் ரூ.1.75 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பெண் மேலாளருக்கு எந்த உடற்பயிற்சி மையமும் அமைத்து தரவில்லை. மேலும், வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத தவணையும் கட்டவில்லை. இதுகுறித்து பெண் மேலாளர், உடற்பயிற்சி மைய உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் இளம்பெண் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.

தகவலறிந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி ஆகியோர் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரது தாய் மற்றும் இளம்பெண்ணை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனிவாசன், அவரது மனைவி உள்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் பல இடங்களில் உடற்பயிற்சி கூடம் ஆரம்பித்து வாடிக்கையாளர்களிடம் ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலித்து 2 மாதம் பயிற்சி அளித்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்தை நவீனமாக்க போவதாக கூறி மூடிவிட்டு, மோசடி செய்தது தெரியவந்தது. சீனிவாசன் மீது மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்னபூரணி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement