தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சியளிப்பது ஏன்..? உயர் நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத்: உடற்பயிற்சிக் கூடங்களுக்குப் பெண்களும் ஆண்களும் சென்று பயிற்சி மேற்கொள்வது தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. இருப்பினும், பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்களில் பெண்களுக்கெனத் தனியாகப் பெண் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆண் பயிற்சியாளர்கள் பெண்களிடம் அத்துமீறுவதாகவும், பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதின் சைனி என்ற உடற்பயிற்சிப் பயிற்சியாளர், தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்ணை ரகசியமாகக் வீடியோ எடுத்ததுடன், அவருக்கு ஆபாசப் படங்களையும் அனுப்பியுள்ளார். மேலும், மற்றொரு பெண்ணிடம் சாதி ரீதியாகவும் அவமதிப்பு செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், ‘போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், ஆண் பயிற்சியாளர்களின் கீழ் பெண்கள் உடற் பயிற்சி பெறுவது கவலைக்குரிய விஷயம். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளாரா?, அங்குப் பெண் பயிற்சியாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து மீரட் காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

Advertisement