தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குணா குகைக்கு ஓராண்டில் 18 லட்சம் பேர் வருகை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பின் அதிகரித்த மவுசு

Advertisement

கொடைக்கானல்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பின் பரபரப்பான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது கொடைக்கானலில் குணா குகை கடந்த ஓராண்டில் மட்டும் 18 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கும் நிலையில் குகைக்குள் என்ன இருக்கிறது என்பதை விடியோவாகவும், புகைப்படங்களாகவும் காட்சிபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு காலத்தில் டெவில்ஸ் கிட்சன் என்ற பெயரில் பயமுறுத்தப்பட்ட இந்த பகுதி கமல்ஹாசன் நடித்த குணா படத்திற்கு பின் குணா குகை என்ற பெயரில் கொடைக்கானலின் பிரசித்திபெற்ற சுற்றுலா பகுதியாக மாறியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் வெளியானது மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள படம் குணா குகைக்குள் உள்ள பள்ளத்தில் விழுந்த நண்பரை மீட்கும் போராட்டத்தை மையக்கருவாக கொண்டு இந்த படம் வெளியான பின் கொடைக்கானல் வருபவர்களின் முதல் தேர்வாக குணா குகை உருவானது. குகைக்குள் உள்ள மிக பெரிய பள்ளத்தில் 12 பேர் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். தொடர் உயிரிழப்புகளால் கடந்த 2006 ஆம் ஆண்டு குகைக்குள் செல்ல முடியாது அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

ஆனால் படங்களில் மட்டுமே பார்த்த குணா குகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறதுன் என்ற ஆர்வத்தில் இங்கு படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீலிஸ், ஷார்ட்ஸ், செல்ப்பி எடுப்பதற்காகவே பெருங்கூட்டம் வந்தாலும் வனத்துறையினர் அமைத்துள்ள தடுப்பு கம்பிகளை மட்டுமே பார்த்து செல்கின்றனர். இதனை தடுக்க குகைக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள போட்டோ அல்லது காட்சிகளாக திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ்படம் வெளியான பின் குணா குகைக்கு மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் பேரும் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 18 லட்சம் பேரும் வந்து சென்றுள்ளனர்.

Advertisement

Related News