மன்னார் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதிப்பு
Advertisement
இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகளும் 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதே போல பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளிலும் 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளும்,1000க்கு மேற்பட்ட நாட்டு படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மட்டும் 6000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
Advertisement